Login

Registration
Main
 
Love City 
Site menu
Section categories
Love poems [69]
Friendship poems [4]
Relationship poems [4]
General poems [5]
Tag Board
Lovecity.do.am
LOVE CITY
Statistics

Total online: 1
Guests: 1
Users: 0
Main » Articles » poems » Love poems [ Add new entry ]

ஊமைத்தொலைபேசி
மூன்று நாட்களாய்
உன்னிடம் பேசாத
துயரம் தாளாமல்,
ஒரு நள்ளிரவில்
தொலைபேசியில் அழைத்தேன்.
அழகாய் , பயமாய்
போர்வைக்குள் ஒளிந்து
"ஹலோ" என்றாய்..
"ஹலோ காவல் நிலையமா ?" என்றேன் ,
குறும்பாய் ,
நீ , "ஆமாம்" என்றாய் ..
"ஒ, மகளிர் காவல் நிலையமா?" என்றேன்.

நீ திமிராய்
"மிஸ்டர் , என்ன வேண்டும்?" என்றாய்.
"என் மனைவியை
கண்டுபிடித்துத் தருவீர்களா ?" என்றேன் ,
தோரணை யாய் ,
சிரிப்பை அடக்கிக்கொண்டு
"அடையாளங்கள் என்ன ?",என்றாய்..

நான்,
"அவளுக்கு இரட்டை இதயங்கள் ,
முதுகில் சிறிதாய்
வெள்ளை சிறகுகள்
முளைத்திருக்கும் ,
தலைக்குப் பின்
ஒளிவட்டம் ஒளிரும்,
அவள் இருக்கும் இடமெங்கும்
புன்னகையும் , சந்தோஷமும்
நிறைந்திருக்கும் !
மொத்தத்தில் அவள் தேவதை !!" என்றேன்.

உடனே " ஐ லவ் யூ டா புருஷா!!!"
என்று கத்தினாய் நீ ..
உலக கோப்பையை
வென்ற மகிழ்ச்சி எனக்கு..

"அச்சச்சோ அப்பா வர்ராரு.."
என்று போனை வைத்து விட்டாய் நீ .
ஊமைத்தொலைபேசியை
உற்றுப்பார்த்தபடியே
உட்கார்ந்திருக்கிறேன்
நான்,
நாட்கணக்கில்..
Category: Love poems | Added by: Abinaya (2009-11-01)
Views: 746 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Registration | Login ]
Our poll
How to Say I Love You..?
Total of answers: 248
Comments
200

Copyright lovecity © 2024
Hosted by uCoz